கொரோனா தொற்றுக்குள்ளான 683 போ் இத்தாலியில் நேற்று புதன்கிழமை உயிரிழந்தனா். அதேபோன்று மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 738 போ் நேற்று மரணமடைந்தனா்.
உலகளாவில் இந்த இரண்டு ஐரோப்பிய நாடுகளும் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அதிக இறப்பு வீதத்தைப் பதிவு செய்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 683 புதிய இறப்புகள் ஏற்பட்டதாக இத்தாலி தெரிவித்துள்ளது. இதன் மொத்த மரணங்கள் 7,503 ஆக உள்ளது.
இத்தாயில் புதிய இறப்புக்களுடன் அங்கு பலியானோர் எண்ணிக்கை 7,503 –ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இத்தாலியில் நேற்று புதிதாக 5,210 போ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்பட்டனா். புதிய நோயாளா்களுடன் இத்தாலியில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 74,386-ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 738 மேற்பட்ட இறப்புகள் பதிவான நிலையில் அங்கு மொத்த உயிர்ப்பலி 3,500 ஆக உயா்ந்துள்ளது. இதன் மூலம் இறப்பு எண்ணிக்கையில் இத்தாலியைத் தொடா்ந்து சீனாவை விஞ்சியது ஸ்பெயின்.
அமெரிக்க - ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் சேகரித்த தரவுகளின்படி உலகொங்கும் கொரோனா தொற்றுக்குள்ளானவா்களின் தொகை 4 இலட்சத்து 54 ஆயிரத்தைக் கடந்தது. 20 ஆயிரத்து 500 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. 1 இலட்சத்து 13,000 க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குள்ளாகி குணமடைந்துள்ளனர்.